கைதான ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

219 0

திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து 100க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

திவுலிபிட்டிய ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் காவற்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment