நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வடக்கு ரயில் சேவை மட்டுப்பாடு

215 0

வடக்கு ரயில் பாதையில் நாவட்குளிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலுள்ள பாலம் திருத்தப்பணிகள் காரணமாக நாளை (23) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் ஐந்து நாட்களுக்கு ரயில் போக்குவரத்து இடம்பெற மாட்டாதென ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால், கொழும்பிலிருந்து நாவட்குளி வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறும் எனவும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் தனியான ரயில் சேவையும் இடம்பெறும் எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களின் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு நாவட்குளியிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a comment