கையூட்டல் பெற்ற காவற்துறை அலுவலர் இருவர் கைது!

230 0

2 ஆயிரம் ரூபா கையூட்டல் பெற்ற காவற்துறை அலுவலர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அநுராதப்புரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து பிரிவில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளை கையூட்டல் பெற்றதாக முறைப்பாடு ஒன்று கிடைத்ததனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Leave a comment