இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்: வைத்திலிங்கம் எம்.பி.

312 0

இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. தற்போது நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் 6 மாத காலத்திற்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும். அதன்படி தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலை ஜனநாயக முறைப்படி கட்சிகள் எதிர்கொள்ள வேண்டும். கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 98 சதவீதம் பாராளுமன்ற உறுப்பினர்கள், 95 சதவீதம் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால் நியாயமாக சட்டப்பூர்வமாக இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக எங்களுக்குத்தான் கிடைக்கும். இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாகும்.

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை மெர்சல் படத்தில் விஜய் என்ன பேசி இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது அதனால் அதை பற்றி கருத்து கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment