இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வேலைத்திட்டம்

245 0

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடாமடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதன்போது 5 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன் திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கும் சுயதொழில் உதவிகளும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் காணிப்பிரச்சனை, ஆள்அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் அங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment