சிங்கள மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது.இவ்வாறு கூறியவா் இந்த நாட் டின் இனவாத அரசியல்வாதி ஒருவரல்ல. அகிம்சையையும் தா்மத்தையும் போதிக்க வேண்டிய பௌத்த தேரா் ஒருவரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரா் இனவாதக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் பிரசித்தி பெற்றவா்.இவரது நடவடிக்கைகளும் தான்தோன்றித்தனமானவை.
பௌத்த மக்களின் ஆதரவு இவருக்குப் பெருமளவில் இருப்பதால் இவா் எவருக்குமே அஞ்சுவதில்லை.ஆட்சியாளா்கள்கூட இவருக்கு அஞ்சி நடப்பதைக் காணமுடி கின்றது.
அமைச்சா்களின் அலுவலகங்களுக்குள் அதிரடியாகப் புகுந்து தகராறு செய்வது இவருக்கு விருப்ப மானதொரு பொழுதுபோக்காகும்.ஆனால் இது தொடா்பாக எவராலும் இவரை ஒன்றும் செய்ய முடிய வில்லை.
ஜே.வி.பியினரது
தோல்வி குறித்து
ஞானசாரதேரர் அறியாதவரல்ல
இவா்தான் தற்போது சிங்களவா்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்,சிங்களப்புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறுகிறாா்.சிங்கள இளைஞர்கள் ஏற்கனவே ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடியதையும்,அதனால் ஏற் பட்ட அழிவுகளையும் ஞானசாரதேரா் அறியாமல் இருந்திருக்க மாட்டார்.
1971ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமை யிலான அரசுக்கு எதிராக இடம் பெற்ற கிளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.ஜே.வி.பி எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரால் இந்தக்கிளா்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
கிளா்ச்சி நடத்தியவர்களால் ஒரு சில நாள்களுக்கு சில இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் முடிந்தது.தேசிய படைபலத்தை அவ்வேளை அதிகம் கொண்டிராத இலங்கை அரசினால் கிளா்ச்சியா ளா்களை அடக்க முடியவில்லை.இந்திய அரசின் உதவி அவசரமாகக் கோபப்பட்டது.இ்ந்தியப் படையினரின்வருகையின்பின்னா்கிளர்ச்சியாளா்கள்ஒடுக்கப்பட்டனா்.இதன்பின்னர் ஏராளமான சிங்கள இளைஞா்கள் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனா்.
கொலைசெய்யப்பட்டவா்களின்ஏராளமானசடலங்கள்ஆறுகளிலும்,நீரோடைகளிலும் மிதந்து சென்றன.இதன் பின்னா் ஆா்.பிரேமதாஸ அரச தலைவராக இருந்த போது மீண்டுமொரு கிளர்ச்சி இடம்பெற்றது.இதன் போது ஜே.வி.பியின் முக்கிய தலைவா்கள் பலரும் கொல்லப்பட்டனா்.
அத்தோடு கிளா்ச்சியும் முடிவுக்கு வந்தது. தற்போது எமக்கு மகிந்தவும் வேண்டாம்; மைத்திரியும் வேண்டாம்; ரணிலும் வேண்டாம் எனக் கூப்பாடு போடும் ஞானசாரதேரா், மகா நாயக்கா்கள் ஆட்சிஅதிகாரத்தில் அமர வேண்டும் என்கிறாா்.
இதற்காகவே சிங்களவா்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்; சிங்களப் புரட்சி ஏற்பட வேண்டும் என ஏதேதோ கூறுகிறாா்.புதிய அரசமைப்பில் தமிழா்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லையெனக் கூறும். வடக்கு முதலமைச்சா், தமிழா்களைப் போராடுவதற்குத் தயாராக இருக்குமாறு அறைகூவல் விடுக்கிறாா்.
கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் ஒற்றையாட்சிப் பதத்துக்குப் பதிலாக ஒருமித்த நாடு எனக்குறிப்பிடப்பட்டுள்ளமை பெரியளவிலான முன்னேற்றம் என்கிறாா். புெளட் அமைப்பின் தலைவரான சிா்த்தார்த் தன், அரசமைப்பின் இறுதி வடிவம் வெளிவந்ததன் பின்னா் பாா்த்துக் கொள்ளலாம் என்கிறாா்.ஆனால் புதிய அரசமைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் இனவாதிகள் அதை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டாா்கள்.
சிறு பான்மையின மக்கள் எந்த வகையிலேனும் நன்மை பெறுவதை இவா்கள் விரும்பாமையே இதற்கு காரணமாகும்.மக்களை ஆயுதம் ஏந்துமாறும், அரசுக்கு
எதிராகப் புரட்சியில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுப்பது ஒரு மிகப்பெரிய குற்றச்செயலாகும். பொது பல சேனாவுக்கும் இதுதெரியும்.
ஆனால் அதன் பொதுச்செயலாளர் இதையெல்லாம் தெரிந்த பின்னரும் பகிரங்கமான அறைகூவல் விடுப்பது எவருக்குமே அஞ்சாத அவரது மனநிலையை எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் இளைஞா்கள் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழா்களின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட வில்லை. தமது உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடி எதையும் சாதிக்க முடியாது என்பதால்தான், ஆயுதம் ஏந்தினாா்கள்.அதுவும் தமக்கெனத் தனி நாடொன்றை அமைப்பதே இவா்களின் நோக்கமாகக் காணப்பட்டது.
நாட்டின் நிர்வாகம்
பெளத்த மத பீடத்திடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்
என்கிறார் ஞானசாரதேரர்
ஆனால் ஞானசாரதேரா் முழு நாட்டை யும் மகாநாயக்கா் வசம் ஒப்படைக்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றாா்.அதுவும் வெளிப்படையாக இடம்பெற்றதொரு நிகழ்ச்சியில் வைத்துக் கூறியிருக்கிறாா்.இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?என்பதுதான்இன்றுஎழுந்துள்ளகேள்வியாகும்.
இனவாதமும்,இனவாதிகளும் இந்த நாட்டில் இருக்கும் வரையில் இனங்களுக்கிடையில் நல்லுறவை எதிா்பாா்க்க முடியாது.
ஆனால் இந்த நாட்டைப் பொறுத்த வரையில் அரசுக்குள்ளேயே இனவாதிகள் உள்ளனா்.இவா்கள் வெளியிலுள்ள இனவாதிகளுக்கும் தமது ஆதரவை நல்கி வருகின்றனா்.ஞானசார தேரரும் இதே நிலையில்தான் உள்ளார்.
அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமானால் அரசில் உள்ளவா்களே அதை எதிர்க்க முற்படுவாா்கள். இதனால்தான் இந்த விடயத்தில் அரசு அஞ்சி நடக்கின்றது.சிறுபான்மையின மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள், இந்த நாட்டில் சமத்துவமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது சாதாரண விடயமல்ல.
ஏனென்றால் இந்த நாடு சிங்களவா்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற சிங்கள மக்களது மனோ நிலையை எளிதில் மாற்றிவிட முடியாது.
இனவாதிகளை அரசால் கட்டுப்படுத்த முடியாது
ஞானசார தேரா் போன்றவா்களும் இதைத்தான் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றாா்கள்.பெரும்பான்மையின மக்களின் மனங்களில் இதுவே வேதமாகவும் பதிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் அரசு நினைத்தா லும் இவா்களுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் எதிா்காலத்திலும் பல ஞானசார தேரா்கள் உருவாகிவிடப் போகிறாா்கள்.
இதை இல்லாது செய்ய வேண்டுமானால், இவா்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.இதற்காக எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்.
ஏனென்றால் நாட்டைவிட முக்கியமான தொன்று இங்கு இல்லை. நாடு சீரிழந்து போகுமாயின், அங்கு வசிக்கின்ற மக்கள் ஒருவருமே நிம்மதி யாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியாது.
ஞானசாரதேரர் போன்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டு மென்றால் நோ்மையும்,கொள்கைப்பிடிப்பும்,உறுதியும் மிக்கதலைவர்களே நாட்டுக்குத் தேவை.
Pingback: NKSFB
Pingback: 다시보기
Pingback: 코인선물
Pingback: บาคาร่า
Pingback: Kardinal Stick
Pingback: superkaya88
Pingback: 웹툰 미리보기
Pingback: lsm99
Pingback: superkaya88
Pingback: ทีเด็ดฟุตบอล
Pingback: mooie blote borsten
Pingback: magic mushroom gummies