தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் சரண்

247 0

தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார்.

சர்வதேச வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவரே 3 மில்லியன் ரூபா பணத்துடன் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த சலில முனசிங்க உள்ளிட்ட மேலும் மூன்று பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் இந்த மாத ஆரம்பத்தில் 30 மில்லியன் ரூபாவினை வங்கியிலிருந்து மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், பின்னர் 70 மில்லியன் ரூபாவினை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment