அரசியல் தீர்வை குழப்ப சதி –சாந்தி சிறிஸ்கந்தராஜா

20684 0

தென்பகுதியில் பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் கிடைக்கப்போகிறது என பொய் பிரச்சாரம் செய்து  அரசியல் தீர்வை குழப்ப சதி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா குற்றம் சாட்டியுள்ளார்

மல்லாவி பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலையே  இவ்வாறு தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் பிறக்கப்போகிறது என அங்கு பிரச்சாரம் செய்கிறார்கள் வடபகுதியிலுள்ள ஒரு சில சுயலாபம் கருதுகின்றவர்கள் இந்த அரசியல் யாப்பிலே எதுவிதமான தீர்வுமில்லை  எதுவிதமான முடிவுமில்லை முற்றுமுழுதாக தமிழ் மக்களை மோசம் செய்து விட்டது கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்கின்றார்கள் இவ்வாறாக இந்த மக்களை குழப்புகின்ற வகையிலே நடைபெறும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் புத்தியீவிகள் உண்மை எது சாத்தியமானது எது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

வெண்ணை திரண்டுவரும் போது தாழி உடைந்த கதையாக பல சம்பவங்களை நாங்கள் அறிவோம் இவ்வாறான இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது எமது மக்களுக்கு ஒரு நின்மதியை ஒரு விடிவை தேடிக்குடுக்கின்ற  வகையில் அனைவரும் புத்திசாலித்தனமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிகை விடுத்தார்

Leave a comment