நாளை நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்

229 0

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு தேசிய சம்பள ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த வேலை நிறுத்தம் நாளை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத மேலாளர்களின் தொழிற்சங்க அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி புகையிரத கட்டுப்பாட்டாளர், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment