மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல்

313 0

kadathalகொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்­தப்பட்­டுள்ளார்.

வேன் ஒன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் நேற்று முன்தினம் நள்­ளி­ரவு வேளையில் இக்­க­டத்தல் இடம்­பெற்­றுள்­ள­தாக பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 இது தொடர்பில் கடத்­தப்பட்ட கோடீஸ்­வர வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29)என்­ப­வரின் மனைவி பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அந்த முறைப்­பாடு மீதான மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) சிறப்பு பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்று முன் தினம் நள்­ளி­ரவு வேளையில் பிர­பல உண­வகம் ஒன்றில் நண்­பர்­க­ளுடன் சேர்ந்து உணவருந்தி­விட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் வர்த்­தகர் பம்­ப­லப்­பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.