குழந்தையின் கால்களை பிடித்து சுவற்றில் அடித்த கொடூர தந்தை

241 0

குழந்தை அழுதமையினால் கால்களை பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புத்தல வங்குரவல பகுதியில் வசித்து வந்த விதானகே அசங்க சஞ்சீவ என்பவர் தொழிலுக்கு சென்று வீடு திரும்புகையில் குழந்தை தொடர்ச்சியாக அழுதுள்ளது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் 36 வயதுடைய விதானகே கடந்த 2007 ஒக்டோபர் 21 ஆம் திகதி தனது 9 மாத குழந்தையின் இரு கால்களையும் பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை செய்த நீதிமன்றம் அவரை சில காலங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் சுமார் 10 வருடங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

இதன்போது குறித்த நபரை குற்றவாளியென நீதிமன்றம் நிரூபித்தமையை தொடர்ந்து நேற்றைய தினம் மொனராகலை மாவட்ட மேல் நீதிமன்றம் மரண தண்னை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் குறித்த குற்றவாளி தற்பொழுது பிரிதொரு திருமணம் புரிந்து வசித்து வந்ததாகவும் காவற்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Leave a comment