தொகுதி பிரிப்பு குறித்து கருத்தறிய தீர்மானம்

216 0

மாகாண சபை தேர்தலுக்கான குறித்த தேர்தல் தொகுதிகள் பிரிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் நெவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் அந்த குழு அறிவித்துள்ளது.

மாகாண சபை திருத்தம் திருத்தச் சட்டத்தின் படி, மாகாண சபைகளுக்கான குறித்த நிர்வாக மாவட்டங்களின் கீழ் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின்; மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டும் என அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படியே, மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment