திருகோணமலை பிரதான வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருக்கும் வேளை வர்த்தக நிலைய உரிமையாளரை நேற்று மாலை (17) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.
நகர்ப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் சிகரெட் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 206 சிகரெட்டுகள் கைப்பற்றபகைப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-பிரதான வீதி நாகேஸ்வரன் ஜெயபிரசாந்தன் (29வயது) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸ் 026-2222222
போதைப்பொருள் தடுப்பு பிரிவு 077-2380609