கிராண்ட்பாஸ் பகுதியில் 3 யுவதிகள் மாயம்

5108 0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் காணாமல் போன 3 கொலன்னாவை யுவதிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்த காவற்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

அவ்வாறு காணாமல் போன யுவதிகளில் ஒருவரிடம் இருந்து அவரது கணவருக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெறுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் க்ராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய காவற்துறை நிலையங்களின் ஊடாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலையில் குறித்த தொலைபேசி அழைப்புகளை பரிசீலிப்பதற்கு புதுக்கடை நீதிமன்றத்திடம் காவற்துறையினர் அனுமதிப் பெற்றுக் கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ள குறித்த யுவதிகள் கொலனை – சாலமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள்.

க்ராண்ட்பாஸில் உள்ள உறவினர் ஒருவரது இல்லத்துக்குச் சென்ற அவர்கள், பின்னர் உடைகளைக் கொள்வனவு செய்வதற்காக அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment