சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை – உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

287 0

அம்பாறை மாவட்ட கள உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளித்தவாறு மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்படாமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டாலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரச கள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இதுவரை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பல்வேறு மனுக்கள் சமர்ப்பித்தும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டும் திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை எனவும், இதனால் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் அம்பரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க செயலாளர் எஸ்.ஆப்தீன் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

Leave a comment