மகாநாயக்கர்களின் கருத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மதிப்பளிக்க வேண்டும்- GMOA

234 0

மூன்று பீடங்களினதும் மகாநாயக்கர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவிமடுத்து சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு தேடி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களின் அழுத்தங்களுக்கு பயப்படாமல் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நாட்டின் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் வைத்திய பீட பீடாதிபதிகள் 8 பேரினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தை அடியொட்டியதாக சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை சம்பந்தப்பட்ட தலைவர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Leave a comment