அரியாலை இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

Posted by - October 29, 2017

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பமவம் தொடர்பான சி.சி.டி. வி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு இடம்பெறுவற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரியோகம் இடம்பெற்ற பகுதியை நோக்கி உயிரிழந்த இளைஞர் செல்வதும் துப்பாக்கிதாரிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் செல்வது போன்ற சீ.சீ.டி.வி காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியில் தற்போது குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணை வலயத்திலுள்ள முச்சக்கரவண்டியில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் செல்வதும்

முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜா

Posted by - October 29, 2017

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராவதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே பெருத்தமானவர் என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாகாண சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக நியமிப்பதற்கு அனைத்து தரப்பினரும் விருப்பம் தெரிவித்ததாகவும், எனினும் சிவி விக்னேஸ்வரனின் அரசியல் வருகையுடன் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில்,

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டது

Posted by - October 29, 2017

சைட்டம்  மருந்துப் பீடத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி குழுவால் ஒரு அறிக்கை வெளியிட்டது. அக்குழுவால் இன்று வெளியிடப்பட்ட 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் நிறுவனமானது கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த

காலியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- 4 பேர் பலி

Posted by - October 29, 2017

காலி மாவட்டத்தில் கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குரூடுகஹபியச, மணிகாகம மற்றும் லலிஹ்துவூவுத பித்தனிய ஆகிய பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 15 வயதான மாணவர் காயமுற்ற நிலையில் காயமுற்றார். இது முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக காயமுற்றார். மாணிகாம பகுதியில் நடைபெற்ற இரண்டாவது படப்பிடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 39 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 52 வயதான தந்தை

அம்பகமுவ பிரதேச சபையை பிரிக்க முடியாது – நீதிமன்றம் செல்ல தயார்

Posted by - October 29, 2017

சிங்கள் மக்கள் செறிந்து உள்ள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சிவனொளிபாதமலை உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு: நீக்கப்பட்ட தலைவர்கள் போட்டியா?

Posted by - October 29, 2017

ஸ்பெயினில் இருந்து தனிநாடாக பிரிந்து விட்டதாக அறிவித்த கேட்டாலோனியா பாராளுமன்றத்தை கலைத்துள்ள ஸ்பெயின் அரசு தற்போது அங்கு மறுதேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் 84 வயதான சீனியர் புஷ் மீது பெண் செக்ஸ் புகார்

Posted by - October 29, 2017

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது எற்கனவே 2 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ள நிலையில் தற்போது 3-வதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

பிரிட்டனின் கடிகார நேரம் மாறுகிறது: 1 மணி நேரம் குறைப்பு

Posted by - October 29, 2017

கடிகார நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்படும் பிரிட்டன் முறைக்கான பகல் சேமிப்பு நேரம் (டிஎஸ்டி) இந்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

குர்திஸ்தான்: மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் – முக்கிய அரசு அதிகாரி தகவல்

Posted by - October 29, 2017

குர்திஸ்தானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - October 29, 2017

ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணத்தை, அடுத்த மாத ஆரம்பம் முதல் நூற்றுக்கு 50 வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே குறிப்பிட்டுள்ளார். மேலும், 2008ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போதே, ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், வர்த்தக நோக்கத்திற்காக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், என்.ஜே.இதிபொலகே சுட்டிக்காட்டியுள்ளார்.