அமெரிக்க முன்னாள் அதிபர் 84 வயதான சீனியர் புஷ் மீது பெண் செக்ஸ் புகார்

364 0

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது எற்கனவே 2 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ள நிலையில் தற்போது 3-வதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவர் சீனியர் புஷ் என அழைக்கப்படுகிறார். இவரது மகன் ஜார்ஜ் புஷ். இவரும் அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார்.

84 வயதான சீனியர் புஷ் வயது முதிர்ந்த நிலையில் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். தற்போது சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.

இவர் மீது எற்கனவே 2 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது 3-வதாக ஒரு பெண் ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். அவரது பெயர் கிறிஸ்டினா பாகர்க்ளின் எழுத்தாளராக இருக்கிறார். இவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஹூஸ்டன் நகரில் கடந்த 2014-ம் ஆண்டில் ஜார்ஜ் புஷ் மனைவி பிளர்பரா புஷ் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டும் விழா நடந்தது.

இந்த விழாவில் கிறிஸ்டினா பாகர் விருந்தினராக கலந்து கொண்டார். போட்டோ எடுக்கும் போது சீனியர் புஷ் தன்னை கைகளால் அரவணைத்து கட்டி தழுவினார். என தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டை சீனியர் புஷ்சின் செய்தி தொடர்பாளர் ஜிம் மேக்ராத் மறுத்துள்ளார். முன்னாள் அதிபர் சீனியர் புஷ் 5 ஆண்டுகளாக சக்கர நாற்காலி மூலம் வாழ்கிறார். அதனால் போட்டோ எடுக்கும் போது அவரது கை கிறிஸ்டினா பாகரின் பின் பகுதியில் பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment