ஆனந்த சங்கரி, சுரேஷ் தனித்துப் போட்டி

Posted by - November 5, 2017

இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 

வித்தியா கொலையாளி தப்பித்த விவகாரம்: யாழின் முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை

Posted by - November 5, 2017

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

Posted by - November 5, 2017

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஏமன்: தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி

Posted by - November 5, 2017

ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் உள்ள கோர் மஸ்கார் மாவட்ட அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளதால் பலி

பயணிகளை கீழே இறங்க வைக்க ஏ.சி.யை ஆஃப் செய்த பாக். விமான நிறுவனம்

Posted by - November 5, 2017

பாகிஸ்தானில் வெளிச்சம் குறைவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க வைப்பதற்காக விமானிகள் ஏ.சி.யை அணைத்துள்ளனர்.

வியட்நாமை தாக்கியது தாம்ரே புயல்!

Posted by - November 5, 2017

ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள தாம்ரே புயலினால் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது: சவூதி பட்டத்து இளவரசர் நடவடிக்கை

Posted by - November 5, 2017

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - November 5, 2017

வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மழையால் நோய் பரவாமல் தடுக்க 200 நடமாடும் மருத்துவ குழுக்கள்!

Posted by - November 5, 2017

சென்னையில் பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க 200 சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெள்ளப்பகுதியில் 31 அமைச்சர்கள் முகாம்: நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர்

Posted by - November 5, 2017

31 அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.