ஏமன்: தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி

258 0

ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் உள்ள கோர் மஸ்கார் மாவட்ட அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment