முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்று (05) நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ். சிவமோகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அங்கு மோதல் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர்