நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது- ஜனாதிபதி

299 0

நாட்டை கட்டியெழுப்பவும் சிறார்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பயன்படுத்தும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, தெய்யந்தர தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் அந்த நாட்டில் கல்விமான்கள் உருவாக வேண்டும்.

நாட்டின் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பணிகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment