தகவலறியும் உரிமைக்கான சட்டம் பெப்ரவரி முதல் அமுல்

Posted by - January 3, 2017

தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். புது வருடத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தகவல் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தகவல் அறியும்

ஹம்பாந்தொட்டை துறைமுகம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - January 3, 2017

ஹம்பாந்தோட்டைத் துறைமுக உடன்படிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்ததிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து நீதிமன்றம் ஊடாக தெளிவுபடுத்தலை எதிர்பார்த்துள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன

தொடருந்து பாதை விபத்துகள் – வருடத்திற்கு 360 பேர் பலி

Posted by - January 3, 2017

தொடரூந்து பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் பி. ஏ. பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, வருடத்துக்கு இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தொடரூந்து பாதைகளில் நடந்து செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறிச் செல்வோர் கைதுசெயயப்பட்டால், நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேர்தலை காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

Posted by - January 3, 2017

எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை ஏற்கொள்ளாமல் நிராகரிப்பதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

சிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்?

Posted by - January 3, 2017

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.

மகிந்தவால் முடிந்தால் அரசாங்கத்தை கவிழ்த்துக்காட்டட்டும் – ரணில்!

Posted by - January 3, 2017

தான் இம்மாதம் ஒரு வாரகாலம் சுவிற்சர்லாந்து பயணமாகவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ஷவால் முடிந்தால் அரசாங்கத்தைக் கவிழ்த்துக்காட்டட்டும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளார்

கைத்துப்பாக்கியை ஒப்படைத்ததற்காக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு பணப்பரிசு!

Posted by - January 3, 2017

கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கனடாவிற்குச் செல்லவேண்டாமென வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் அறிவிப்பு

Posted by - January 3, 2017

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

Posted by - January 3, 2017

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அமெரிக்கா மீது வடகொரியாவால் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாது

Posted by - January 3, 2017

‘அமெரிக்கா மீது வடகொரியாவால் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாது’ என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.‘அமெரிக்கா மீது வடகொரியாவால் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாது’ என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.