விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை தகவல்களை வழங்கவில்லை- தயாசிறி ஜயசேகர

Posted by - January 3, 2017

  விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை அவர்களின் தகவல்களை வழங்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டு சங்கங்களின் வங்கி கணக்கு இலக்கங்கள் கோரப்பட்ட போதிலும், சில விளையாட்டு சங்கங்கள் மாத்திரமே அதற்கான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு தகவல்களை பெற்றுக் கொடுக்காத விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை

நாளை ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

Posted by - January 3, 2017

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலுவலகம் வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அலுவலகம் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமை தாங்கவுள்ளார். பேண்தகு யுகம் 3ஆம் ஆண்டு உதயத்தின் மக்களின் பிரச்சினைகளை வினைத்திறனான முறையில் தீரத்துவைக்கும் நோக்கில்

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - January 3, 2017

யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஆயிரத்து 390 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 559 பேர் வரையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதனைவிட பல்வேறு தொழில்களின் நிமிர்த்தம் தங்கியிருப்போர் சுற்றுலாப்பயணிகளாக வருவோர் என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளடங்கிய வகையில் மருத்துவ தேவையை நிறைவு செய்யவேண்டிய ஒரே ஒரு வைத்தியசாலையாக நெடுந்தீவு

மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி

Posted by - January 3, 2017

நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வன பாதுகாப்பு திணைக்கள இலங்கை தொழில்நுட்ப சேவையின் பயிற்றுவிப்பாளர் தர வட்ட வன அலுவலர்கள் மற்றும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் நிறைவேற்று தர உதவிப் பணிப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, 71 வட்ட வன அலுவலர்களுக்கும், 26 திணைக்கள ரீதியான நிறைவேற்று

அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை  இல்லை- பிரியங்கர ஜயரத்ன

Posted by - January 3, 2017

  அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை இல்லையென உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரியங்கர ஜயரத்ன, அமைச்சின் நடவடிக்கையினால் நான் இராஜினாமா செய்யவில்லை. நீண்ட கலந்துரையாடலின் பின்னரே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். எனது கட்சியினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்தேர்ச்சியாக என்னை வற்புறுத்தினர். அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் எனது தீர்மானத்துக்குக் காரணமாகியது. மத்திய வங்கியின் முறி

தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது பைசர் முஸ்தபாவின் பொறுப்பு – ஐ.தே.க

Posted by - January 3, 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பொறுப்பு என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பீ.பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அவசியம் இருப்பதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் முன்வைத்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் உள்ளுராட்சி தேர்தல் ஒன்றை

ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு உரிய பதில் கிடைக்காது போனால், மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு – தபால் தொழிற்சங்களின் முன்னணி

Posted by - January 3, 2017

ஜனாதிபதி செயலகத்துக்கு தபால் சேவை ஊழியர்களினால் வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காது போனால், நாடு முழுவதிலுமுள்ள சகல தபால் நிலையங்களையும் மூடி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்களின் முன்னணி அறிவித்துள்ளது. தபால் சேவை ஊழியர்கள் வலையமைப்பின் ஏற்பாட்டாளர் சின்தக பண்டார இவ்வறிவித்தலை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார்.

வொக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

Posted by - January 3, 2017

குளியாபிட்டிய – லபுயாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் வொக்ஸ்வேகன் சிற்றூர்ந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோரின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. வொக்ஸ்வேகன் உட்பட ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் பல்வேறுப்பட்ட ரக சிற்றூர்ந்துகள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. குறித்த தொழிற்சாலை ஊடாக 3 ஆயிரம் நேரடி தொழில் வாய்புக்கள் கிடைக்க பெறவுள்ளன. இதனிடையே, சிற்றூர்ந்து தொழிற்சாலை தொடர்பான பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில்

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

Posted by - January 3, 2017

  அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர் இருந்தமைக்கான சாட்சியங்கள் தம்வசம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. தமக்கு எதிராக செயற்படுகின்ற குழுவொன்றினாலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்;. தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கான காரணம் பொதுபல சேனா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு

மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - January 3, 2017

நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருந்தார். இதேவேளை, குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கைளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கு தமது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளே காரணமாக அமைந்துள்ளதாக நல்லிணக்க பொறிமுறைச் செயலணியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில்