யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள்- அரசாங்க அதிபர் (காணொளி)

Posted by - January 6, 2017

  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99 தசம் 45 வீத பணம் வேலைத்திட்டங்களில் செலவுசெய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொர்பாக இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட

முல்லைத்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த வருடத்தில் 5755 மில்லியன் ரூபா ஒதுக்கீடு(காணொளி)

Posted by - January 6, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில், 5755 மில்லியன் ரூபர் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த  2016, ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், அதற்காக கிடைக்கப்பெற்ற நிதியுதவியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நடப்பாண்டில், முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு தெளிவுட்டும்  கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட செயலர்;

மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்களுக்கு பிணை (காணொளி)

Posted by - January 6, 2017

  கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்கள் ஐந்து பேர், 50 ஆயிரம் ரூபா சரீர பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் ஆஜரான நிலையிலேயே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் காணிக்குள் பிரவேசித்து கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் போராளியர்களுக்கு எதிராக

சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்பு- நசீர் அகமட்(காணொளி)

Posted by - January 6, 2017

சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டத்தின் முன்னோக்கிய நகர்வினைக் குழப்புவதற்கான சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தாங்கள் தெளிவாகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு

மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைது(காணொளி)

Posted by - January 6, 2017

மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒன்பது துவிச்சக்கர வண்டிகளும் நான்கு விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல்போனமை தொடர்பில் இடம்பெற்றுவந்த விசாரணையின்போது குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த

எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம்- தமிழ் மக்கள் பேரவை

Posted by - January 6, 2017

  எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்லவென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கூட்டுறவு

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை- விஜேதாச ராஜபக்ச

Posted by - January 6, 2017

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைக்க, நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு தாம் தயாராக இல்லை எனவும் இன்னமும்

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண விஜயம்(காணொளி)

Posted by - January 6, 2017

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவினால் பார்வையிடப்பட்டன. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண சாவகச்சேரி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டதுடன், கடமைகளையும் பார்வையிட்டார். சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்த சில்வா மெனிக்கே தலைமையில் இன்று நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் துசித்தகுமாரவும் பிரசன்னமாகியிருந்தார்.

தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 6, 2017

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதம பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.செல்வராஜாவின் வழிகாட்டலின் கீழ், வடக்கு, கிழக்கு, மலையக பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் திறமை வாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில், தெரிவு செய்யப்படவர்களுக்கு தமிழ் எழுத்து மற்றும் பேச்சு பயிற்சிகள், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகாலம் வழங்கப்பட்டன. இதற்கமைய தமிழ் மொழிக்கற்கை நெறியினை நிறைவு

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது- சுதந்திரக் கட்சி

Posted by - January 6, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை எதிர்வரும் ஏழாம் திகதி கைச்சாத்திடப்போவதில்லை எனவும் அன்று அங்கு வைபவம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை மாத்திரமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், வேறு