வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - November 15, 2017

பரசங்கசாகஹவெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும், 05.45க்கு கல்கிசையில் இருந்தும் 08.50க்கு கொழும்பு

UNP தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை-G.L.பீரிஸ்

Posted by - November 15, 2017

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொள்­ளு­மாறு அக்­கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. எனினும் அக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந் நிகழ்வில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர்

சபாநாயகர் – கடற்படைத்தளபதி சந்திப்பு

Posted by - November 15, 2017

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய கடற்படை தளபதியாக பதவியேற்றத்தை தொடர்ந்து வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க சபாநாயகரை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்ததுடன் சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் …..-விக்கி

Posted by - November 15, 2017

நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார். இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று  எம்­மவர்  நினைத்தால் அது முற்­றிலும் தவ­றா­ன­தாகும். தமிழ் மக்கள் போரில் தோல்­வி­ய­டை­ய­வில்லை.    இன்­றைய தமிழ் தலை­மைத்­துவம்  நாம் தோற்­று­விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்­கவும் ஒற்­றை­யாட்­சியின்

ஜெனிவா சமர் இன்று

Posted by - November 15, 2017

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும்  28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு    கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.  இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன. விசே­ட­மாக  அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி,   பெல்­ஜியம் , எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற்றும் சுவிட்ஸர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை  மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில்   கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இந்த நாடுகள் இலங்கை தொடர்பில்

பெற்றோல் நெருக்கடிக்கு கூட்டுத்தாபனத்தின் பொடுபோக்கே காரணம்- குழு அறிக்கை

Posted by - November 15, 2017

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதனை முகம்கொடுக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது பெற்றோலியக் கூட்டுத்தாபம் பொடுபோக்குக் காட்டியுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லாதபோதும் அதனை முகாமை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமையே தட்டுப்பாடு ஏற்பட பிரதான காரணம் எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை விசேட நிபுணர் ஒருவரை நியமித்து ஆராயுமாறும் குழு பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்- மஹிந்த

Posted by - November 15, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ நேரடியாகப் போட்டியிடாததனால், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அர்ஜுன மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

Posted by - November 15, 2017

தேவையான அளவு பெற்றோலை கையிருப்பில் வைத்திருக்காமையே நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலைமைக்குக் காரணம் என நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மீது அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். பெற்றொல் தட்டுப்பாட்டுக்கான முழுமையான பொறுப்பை அர்ஜுன ரணதுங்க ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு தேர்தல் ஒன்றுக்கு

பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக புஜித

Posted by - November 15, 2017

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சனத் புஜித நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பரீட்சைகள் பணிப்பாளராக செயற்பட்டவர். அத்துடன், இவர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சைகள் ஆணையாளராகவும் (நிருவாகப் பிரிவு) பல வருடங்கள் சேவையாற்றிய ஒருவர்  எனவும் கூறப்படுகின்றது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் விசாரணை நடவடிக்கையொன்றின் காரணமாக தற்போதைய பணிப்பாளர் நாயகமாக இருந்த டபிள்யு.என்.எம்.ஜே. புஷ்பகுமார கல்வி அமைச்சுக்கு நேற்று (14) திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பரீட்சைகள் ஆணையாளரின் திடீர் இடமாற்றத்துக்கான காரணம் இதுதான்- கல்வி அமைச்சு

Posted by - November 14, 2017

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கு அமைய, கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.