பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கு அமைய, கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.