யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன்  பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017

கல்விப்பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைச் சேர்ந்த கனகசுந்தரம் யதுசாஜன் என்ற மாணவனே பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017

கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மானிப்பாய் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த பத்மநாதன் குருபநேசன் எனும் மாணவனே கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலையில் இவ்வருட கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தெடர்பாக கல்லூரி அதிபர் விளக்கமளித்தார்.

தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்காமை தமிழருக்கு செய்யும் துரோகம் : இரா.துரைரெட்னம்

Posted by - January 7, 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

ஊடகச்சுதந்திரம் அறியும் காலம் நீடிப்பு!

Posted by - January 7, 2017

ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நேற்றுடன்(6)  இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - January 7, 2017

முன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பான வழக்கில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி

Posted by - January 7, 2017

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்

Posted by - January 7, 2017

நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை!

Posted by - January 7, 2017

அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச முதலீட்டு வலயம் மற்றும் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017

பிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.

விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி

Posted by - January 7, 2017

மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள் விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது என்பதையே பறைசாற்றுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு 6 .3 .2017 அன்று நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி என்றும் இல்லாதவாறு இம்முறை முக்கியம் பெறுகின்றது. சிறிலங்கா சனாதிபதி மற்றும் பிரதமரின் சம்பிரதாய வருகைகளும் அள்ளிவீசும் வாக்குறுதிகளும் தமது