இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா செல்லவுள்ளார்

Posted by - January 8, 2017

வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் அவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. பிரித்தானியா செல்லும் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தமது விஜயத்தின் போது, அந்த

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 7, 2017

வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம் ரூபா கடனாகவும் வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாவை செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டனர். அத்துடன் தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய மாதாந்தக் கூட்டம்(காணொளி)

Posted by - January 7, 2017

இலங்கை போக்குவரத்து சபையின் 59 வருட வரலாற்றில் முதன் முறையாக இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தலைமையில் நடைபெற்ற பிராந்திய மாதாந்தக் கூட்டத்தில் இலங்கைப் போக்குவரத்து சபையால் 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்; தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இன்றைய கூட்டத்தில் இலங்கை போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், திறைசேரி பணிப்பாளர், பிரதேச நிறைவேற்று அதிகாரிகள், செயலாற்றல் பிராந்திய முகாமைளாயர், பொறியியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்(காணொளி)

Posted by - January 7, 2017

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் சார்பாக பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் கனடா சென்றடைந்த வடக்கு மாகாண முதலமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன பெண் இலங்கையில் பலி

Posted by - January 7, 2017

குறித்த சுற்றுலாப் பயணி வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்தொன்றில் மோதியுள்ளார் காயங்களுக்கு உள்ளான அவர் குருணாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைகள் பலன் இன்றி மரணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதி மொழிக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 27 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர். எனினும் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் இளவாலையில் கைது

Posted by - January 7, 2017

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாளை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழு புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியது. இதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து, வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இவர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பி அவர் இதனைத் கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணிய பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக்

மீள்திருத்ததுக்கு ஜனவரி 23க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - January 7, 2017

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டன. இந்த நிலையில், பாடசாலை ஊடாக தோற்றிய மாணவர்களுக்கான மீள் திருத்த விண்ணப்பம், பரீட்சை பெறுபேறுகளுடன் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனிப்பட்ட முறையில் தோற்றிய பரீட்சார்த்திகள், தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் அறிவித்தலுக்கு அமைய

வாகன விபத்துகளில் நால்வர் பலி

Posted by - January 7, 2017

மத்தள மற்றும் கடுவெல பகுதியில் இடம்பெற்ற வாகன வித்துகளில் 4 பேர் பலியானர் மத்தள வானூர்தி தள வீதியின் படவுகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் பலியானர். அத்துடன், ஒருவர் காயமடைந்தார். முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதேவேளை, கடுவெலயிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்தனர். கொங்கிறீட் கொண்டுசெல்லும் வாகனமொன்றும், சிறு லொறியொன்றும் மோதியதில் இந்த