வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

322 0

vavuவன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம் ரூபா கடனாகவும் வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாவை செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன் தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

காலை 7.00 மணியில் இருந்து சுமார் 4.00 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா சந்தித்திருந்தார்.