சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சில வரையறைகளை விதிப்பு
பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே தகவல்கள் வெளியிடப்பட இருப்பதால் இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொலிஸ் ஊடக கொள்கை வெளியிடும் நிகழ்வு நேற்று சட்டம் ஒழுங்கு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, ஊடகங்களுக்கு செய்திகளை முறையாக அனுப்பவே புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கல்ல எனவும் தெரிவித்தார். கொள்கை

