மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

Posted by - January 14, 2017

தைத்திருநாளை உலகெங்கும் உள்ள இந்துக்கள் சிறப்பாக இன்று கொண்டாடிவருகின்றனர். தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளில் இன்று அதிகாலை பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் பொங்கல் பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றதுடன் வீடுகளிலும் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலனசபையினரின் ஏற்பாட்டில் ஆலய முன்றிலில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்தின்

யாழ் வலி வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பாதை திறப்பு(காணொளி)

Posted by - January 14, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கான பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமாகிய இன்றையதினம் ஊறணிக்கடற்கரைக்கு செல்வதற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட பாதையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜென்றல் மகேஸ் சேனநாயக்க, தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். தையிட்டி வடக்கு ஜெ.249 ஊறணி கிராமத்தின் ஆவளை சந்தியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையே இராணுவத்தினால் சீரமைக்கப்பட்டு

வறட்சிக்கு முப்படையினர் மூலம் நிவாரணப் பணிகள் – மைத்திரி!

Posted by - January 14, 2017

நாட்டில் தற்போது வறட்சி நிலவிவரும் நிலையில் முப்படையினர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவார்கள் என ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதி மறுக்கப்பட்டதால் வெதும்பும் ரவிராஜ் குடும்பத்தினர்

Posted by - January 14, 2017

கடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்பதே அவற்றின் தலைப்புச் செய்திகளாக இருந்தன.

வறட்சி காரணமாக 150 பில்லியன் ரூபா மேலதிக செலவு

Posted by - January 14, 2017

காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எந்தவித தடைகள் வந்தாலும் அதற்காக சரியான தயார் நிலையில் அரசாங்கம் இருப்பதாகவும், இதற்காக மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வறட்சி நிலமை குறித்து பேச சுகாதார துறை கூடுகிறது

Posted by - January 14, 2017

எதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாற்றி விட்டது!

Posted by - January 14, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்குகேட்டது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே நாங்கள் கேட்கின்றோம். அதனையே தமிழ் மக்கள் பேரவையும் கோருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டம்

Posted by - January 14, 2017

எதிர்காலத்தில் சமுர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.

மஹிந்த, சஷி வீரவன்சவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்

Posted by - January 14, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர்கள்!

Posted by - January 14, 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.