இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்திற்கு எலிசபெத் மகாராணி, நரேந்திர மோடி வாழ்த்து

Posted by - February 5, 2017

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்திற்காக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள தகவலில் இலங்கை மிகவும் பெறுமதியான அயல்நாடு என குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை மேலும் சுபீட்சத்தை எட்ட வேண்டும் என தாம்

ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய சத்திரசிகிட்சை

Posted by - February 5, 2017

ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய ஆபரேஷன் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவோமா அறிவித்துள்ளார்.

வௌ்ளை மாளிகையில் பணிபுரிவோருக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்தார் ட்ரம்ப்

Posted by - February 5, 2017

வௌ்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பான ஆடை அணிந்து வர வேண்டும் என்றும் தங்களது புறத்தோற்றத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம் ட்ரம்ப். அதாவது, “பெண்கள் பெண்களைப் போலவும், ஆண்கள் ஆண்களைப் போலவும்” உடையணிந்து வர வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜீன்ஸ் உடை அணிவதற்கு தடை போடவில்லை. ஆனால், பெண்கள் ஜீன்ஸ் அணிந்தாலும்

ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்க சீனா திட்டம்

Posted by - February 5, 2017

விண்ணிலிருந்து செலுத்தித் தாக்கும் திறனுள்ள சிறிய ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவலை சீன அரசு வெளியிடும் நாளிதழான “சைனா டெய்லி’ வெளியிட்டுள்ளது. விண்ணிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகளை சீன விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது. அந்த ஏ.ஆர்.-2 ரக ஏவுகணைகள் சுமார் 20 கிலோ எடையுள்ளவை. ஐந்து கிலோ எடையுள்ள ஏவுகணை போன்ற ஆயுதங்களை சுமந்து செல்லும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 735 கிலோமீட்டர்

சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

Posted by - February 5, 2017

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம் தினசரி 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

அதிமுக எம்எல்ஏ கூட்டம்: புரளிகளை நிராகரிக்கும் அமைச்சர்கள்

Posted by - February 5, 2017

அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களுடன் பொது செயலாளர் சசிகலா கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

Posted by - February 4, 2017

இந்தியாவின் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்டமாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவாவில் அதிகபட்சமாக 83 சதவீத வாக்குகளும், பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், ஆளும் ஷிரோமணி அகாலிதளம் – பாரதீய ஜனத்தா கட்சி கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே போட்டி நிலவுகிறது. ஆயிரத்து 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40 தொகுதிகள் கொண்ட

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதமின்றி உழைக்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

Posted by - February 4, 2017

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இணைந்து உழைக்க வேண்டுமென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், இன்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இன, மத மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இப்போது சுமூகமாக வாழ்கின்ற போதும்

6 மாத கால விடுதலை கோரி நளினி மனு

Posted by - February 4, 2017

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நளினி, 6 மாத கால விடுதலை கோரி, சிறை கண்காணிப்பாளர் ஊடாக இந்திய சிறைத்துறை தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில்;, அதற்காகவே இந்த விடுதலையை கோரியுள்ளதாக நளினியின் சட்டத்தரணி இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுவிக்குமாறு நளினி-முருகன் உள்ளிட்ட கைதிகள் கோரிவருகின்றனர். இதனிடையே, ”ராஜீவ் கொலையும் மறைக்கப்பட்ட உண்மைகளும்,

டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரல்

Posted by - February 4, 2017

ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரி, வழங்கு தொடரப்போவதாக மாலபே தனியார் மருத்து கல்லூரியின், பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு தொடர்பில் அண்மையில் கெமுனு விஜேரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்கு எதிராக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்கருத்து வெளியிட்டிருந்தார். டிலான் பெரேரா இந்தன்போது வெளியிட்ட கருத்துக்கள்