யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போயுள்ளது
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர, குருநாகல் முத்தெட்டுகல மற்றும் மஹவ முதலான தொடரூந்து நிலையங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பணப்பொதியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தொடரூந்து திணைக்களமும், காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பணம் காணாமல்போனமை தொடர்பில் குறித்த தொடரூந்தில் பணியாற்றிய தொடரூந்து கட்டுப்பாட்டாளர், சாரதி மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தொடரூந்து பாதுகாப்பு

