கேப்பாபிலவு மக்களுக்காக நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

236 0

தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்க்கான நடவடிக்கைகளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.