பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

Posted by - February 13, 2017

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து ஆண், பெண் ஆசிரியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ளுமாறு கோரி வடக்கு ஆசிரியர்கள் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 10ஆம் திகதி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் வன்னியில்

யேர்மனி மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

Posted by - February 13, 2017

கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி

Posted by - February 13, 2017

ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான மன உளைச்சலை கொடுத்துள்ளதாக அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனீவாவுக்கு செல்வதாக சில ஊடகங்கள் எழுதுவதாகவும், இதுதொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான்

எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - February 13, 2017

தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டதை தொடர்ந்து குறித்த வீதி காவற்துறையினரால் மூடப்பட்டுள்ளது. தமது சேவையினை நிரந்தரமாக்குவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தௌிவுபடுத்துவதற்காக அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டதாக தெரிவித்தார்.

வயம்ப எல திட்டம் ஆரம்பித்து வைப்பு

Posted by - February 13, 2017

வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று முற்பகல்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீஓய மற்றும் ஹக்வட்டுனா ஓய நீர்த்தேக்கங்களுக்கு மகாவெலி நீரை திசை திருப்பி குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள பல குளங்களை வளப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்துவதையும் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதையும் நோக்காகக் கொண்டு வடமேல் கால்வாய் திட்டம் மகாவெலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

Posted by - February 13, 2017

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் ஒன்றுகூடிய மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிலக்குடியிருப்பு மக்களின் 14 நாட்கள் போராட்டத்திற்கு முடிவு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு சகலராலும் கையொப்பமிடப்பட்ட கடிதம் அவைத்தலைவரினால் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து(காணொளி)

Posted by - February 13, 2017

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த வாகனமும், ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாடசாலைச் சேவை வாகனமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகவில்லை என்றும், ஹயஸ் வாகனத்தில் பயணித்த மூவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹயஸ் வாகனம் சேதத்திற்குள்ளாகியதாக

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறுவப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால் தான் அந்த அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உறையற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.