கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய சட்ட மா அதிபர் அனுமதி, வெகு விரைவில் கைது ?
கடந்த அரசாங்கத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம்

