கிளாலியில் மணல் அகழ்வை தடுக்க கோரி கூரை மீது ஏறி போராட்டம்

Posted by - December 27, 2017

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  மணல் அகழ்வைத் தடுக்ககோரி  கிராமவாசி  ஒருவர்  கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல  நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது   போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில்  ஈடுப்பட்டு வருகின்றார்.

கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்த வவுனியா வர்த்தகர்; கடத்தல்காரர்கள் சிக்கினர்

Posted by - December 27, 2017

வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருவியம் அருந்தராசா என்பவரே கடத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகரை முன்தினம் இரவு முதல் காணவில்லை என்று கடந்த 20ம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகரின் சகோதரரான விஜேரத்னம் பொன்னம்பலம் என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார்

டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

Posted by - December 27, 2017

மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி  என்ற சிறுமியே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சிறுமி கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 27, 2017

ஓன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் கண்டி தபால் நிலையத்திற்கு முன்னால் விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.தபால் திணைக்களம் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போட்மோர் தோட்டத்தில் 50 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!!!

Posted by - December 27, 2017

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்மோர் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் 50 கிலோ மரை இறைச்சியை வைத்திருந்த ஒருவரை இன்று  காலை 11.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மரை இறைச்சியை  வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போபத்தலாவ – மெனிக்பாலம பகுதியிலிருந்து போட்மோர் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு கொண்டும் செல்லும் போது குறித்த சந்தேக நபர் மரையிறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபருக்கு பிரிதொருவர் மரை இறைச்சியினை

ஸ்ரீ ல.சு.க.யின் ஓர் அங்கமாகவே மஹிந்த தலைமையிலான குழு களமிறங்குகிறது- சுசில்

Posted by - December 27, 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒர் அங்கமாகவே போட்டியிடுகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (27) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அருதிப் பெரும்பான்மை எடுக்க முடியாமல் போன சபைகளில் ஸ்ரீ லங்கா

தெற்காசியாவில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவு

Posted by - December 27, 2017

தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2016ம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை குடும்ப சுகாதார அலுவலக பணிப்பாளர் வைத்தியர் பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்னவால் அண்மையில், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டது. இதன்படி, தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் நேரடியான தாய் மரணங்கள் இவ் வருடம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை

Posted by - December 27, 2017

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை அமைவதை எதிர்த்து பெரியபரந்தன் மக்கள் மகஜர் கையளிப்பு

Posted by - December 27, 2017

கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதை எதிர்த்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தனிடம் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜரை கையளித்துள்ளனர். பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக்

பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர் திகதியை நீடிக்க கோரிக்கை.!

Posted by - December 27, 2017

நுவரெலியா மாவட்டத்தை  சேர்ந்த  தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலை  மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் கடந்த 20ம் திகதியே குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி  திணைக்களத்தினால் வழங்கப்படுள்ளது. எனினும்  அந்த வவுச்சரைக் கொண்டு பாதணிகளை  கொள்வனவு செய்ய இம்  மாதம் 31ம்  திகதியே இறுதி  திகதி என வவுச்சரில்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். இது பாடசாலைகளுக்கான  விடுமுறை  காலம்  என்பதால் மாணவர்களுக்கு இந்த  வவுச்சர்களை  வழங்குவதில் அதிபர்கள்/ஆசிரியர்கள்  சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதேநேரம் பாடசாலை எதிர்வரும் 2ம் திகதியே  ஆரம்பிக்கின்ற நிலையில்,   தூர