கனகபுரம், முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும் முன்னாள் போராளிகள், பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி(காணொளி)

Posted by - November 28, 2017

கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோhர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர், பிராதான பொதுச் சுடரை ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் ஏற்றி வைத்தனர். சுமார் ஜயாயிரம் வரையான பொது மக்கள்

தியாக தீபம் திலீபனின் தூபியில் இடம்பெற்ற மாவீர்ர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 27, 2017

தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் இன்று (27) மணிக்கு தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இராணுவ பிடியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: கோயிலில் அஞ்சலி

Posted by - November 27, 2017

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ பிடியின் அருகிலுள்ளமையினால் அப்பகுதியின் அருகில் அமைந்துள்ள கோயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது வன்னி விளாங்குளத்தில் நடைபெறும் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள்!!

Posted by - November 27, 2017

இலங்கையில் பல பகுதியில் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் வன்னி விளாங்குளத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 27, 2017

சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள் அல்லது அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு 10 மாதங்கள் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. அவரை கைது செய்ய

உலகிலேயே முதல்முறையாக கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும் செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி சாதனை

Posted by - November 27, 2017

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நிக் ஜெரிட்சன். 49 வயதான இவர் தொழில் முனைவோராக இருக்கிறார். பெரிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் அறிவுத் திறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை (ரோபோட் போல) உருவாக்க திட்டமிட்டார். இதற்காக விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபட்டார். அதன் பலனாக அறிவுதிறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு ‘சாம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த அரசியல்வாதி மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்.

சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி

Posted by - November 27, 2017

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாக கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, , “சிரியாவின் மேற்குப் பகுதியில் ஐஎஸ் வசமுள்ள கடைசி பகுதியான அல்-ஷாஃபாஹ் கிராமத்தில் ரஷ்யப் படைகள் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த வான்வழித் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 53 பொதுமக்கள் பலியாகினர். இதில் 21 குழந்தைகளும் அடக்கம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைதேர்தல்: திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

Posted by - November 27, 2017

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் திமுகவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆர்.கே.நகர் இடைதேர்தல் குறித்து முடிவெடுக்க அவசரக்கூட்டமாக இந்தக்கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். மத்தியில் ஆளும் ஆட்சி கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை.

அதிமுக அரசின் ‘அவுட்சோர்சிங்’ மோசடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - November 27, 2017

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியாளர் சேர்ப்பதை உடனடியாகக் கைவிட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கிடவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பினைத் தொடர்ச்சியாகத் தேட முயன்றும் கிடைக்காமல் விரக்தியிலும், மனவேதனையிலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்களில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு, எப்போது நம் வாழ்வில் வசந்தம் வீசும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்துக்

தமிழ் கட்டாயப் பாடம்: பிறமொழி மாணாக்கர்க்கு விலக்கு அளிக்கக்கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - November 27, 2017

தமிழ் கட்டாயப் பாடத்திலிருந்து சில மொழிப் பிரிவினருக்கு மட்டும் விலக்களித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடம் என்பதிலிருந்து பிற மொழி பேசும் மாணவ, மாணவியருக்கு விலக்களித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே முனைவர் பட்டம் கூட பெற முடியும் என்ற நிலை