கவிரதன்

வடகொரியா அணுவாயுத சோதனை தள சுரங்கம் இடிந்து சேதம்

Posted by - November 1, 2017
வடகொரியாவின் அணுவாயுத சோதனைத் தளத்தில் உள்ள சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானிய ஊடகமான அசாஹி என்ற தொலைக்காட்சி இதனைத் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் 6வது அணுவாயுத சோதனையை அடுத்து, கடந்த செப்டம்பர்…
மேலும்

நியுயோர்க்கில் சந்தேகத்துக்குரிய தாக்குதல்- 8 பேர் பலி

Posted by - November 1, 2017
நியுயோர்க்கில் நடத்தப்பட்ட சந்தேகத்துக்குரிய தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர். நியுயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான சாரதி ஒருவர்…
மேலும்

பிணை முறி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்படும்- வசந்த சமரவிங்க

Posted by - November 1, 2017
பிணை முறி தொடர்பில் இதுவரையிலும் வெளியான தகவல்கள் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல்கள் சில, இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரவிங்க இதனை  தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த குரல்…
மேலும்

தேர்தல்கள் ஆணைக்குழு மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் கூடவுள்ளது

Posted by - November 1, 2017
தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஒன்று கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறித்த வர்த்தமான அறிவித்தல்…
மேலும்

அம்பலாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

Posted by - November 1, 2017
அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில்…
மேலும்

தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு

Posted by - November 1, 2017
தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்கள வர்த்தக…
மேலும்

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து வர்த்தமானி- ஃபைசர் முஸ்தபா

Posted by - November 1, 2017
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யும் வர்த்தமானியில், இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதன்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் இன்றுடன் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

சீனாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 1, 2017
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சீனாவின் பெய்ஜிங்க நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் முக்கியமான பங்காளியாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்து…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி விடயம் உறுதி- ஜெயம்பதி விக்ரமரத்ன

Posted by - November 1, 2017
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் யாப்பு தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பான அரசியலமைப்பு பேரவையினர் இரண்டாம்…
மேலும்

மானஸ்தீவு அகதிகள் முகாமில் பதட்ட நிலை

Posted by - November 1, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியுகினி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த முகாமை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 200 அகதிகள் வரையில் நவுறு…
மேலும்