கவிரதன்

ராஜபக்ஸ போன்றோரின் குறிக்கோள் தொடர்பில் வடக்கு முதல்வர்

Posted by - November 4, 2017
அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ஸ போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் பேசி, இந்த அரசாங்கம் அரையும் குறையுமான…
மேலும்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்

Posted by - November 4, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்திக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளும், மக்கள் பிரதி நிதிகளும் தீர்மானித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர் போராட்டம் நடத்திவரும் யாழப்பாணம் பல்கலைக்கழக…
மேலும்

கிழக்கில் இனவிரிசலை ஏற்படுத்த தீயசக்திகள் முயற்சி – சிறிநேசன்

Posted by - November 4, 2017
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தும் வகையில் தீயசக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் உதவக்கூடாது – சுமந்திரன்

Posted by - November 4, 2017
சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சிக்கு தமிழர்கள் உதவியாக இருந்துவிட கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை,…
மேலும்

அரியாலை துப்பாக்கிச் சூடு – விசேட அதிரடிப்படை அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள்

Posted by - November 3, 2017
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறை விசேட அதிரடிப்படையின் உதவி காவற்துறை அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்பு பிரிவினர் இன்று அவர்களை கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 22…
மேலும்

மஹிந்த சபாநாயகரிடம் முறைப்பாடு

Posted by - November 3, 2017
சபாநாயகரிடம் முறையிட்டே நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற தாம் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் உரையாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, உரையாற்ற வாய்ப்பு கிடைக்காத நிலையில், சபாநாயகரிடம்…
மேலும்

குடு ருஜினியின் சகோதரி கைது

Posted by - November 3, 2017
மஹரகம பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோகித்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.…
மேலும்

சுனாமி ஒத்திகை

Posted by - November 3, 2017
சுனாமி தொடர்பான ஒத்திகை நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அதற்கான ஒத்திகை நிகழ்வுகள் ஆரம்பமாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்…
மேலும்

ஆசிய சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - November 3, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது ஆசிய சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார். இதன்படி இன்று அவர் ஜப்பான் செல்கிறார். அதன் பின்னர் தென்கொரியா, சீனா, வியட்நேம் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…
மேலும்

தந்தையின் வாகனத்தில் மோதி குழந்தை பலி

Posted by - November 3, 2017
வீரகெடிய – அத்தநயால பிரதேசத்தில் தந்தையின் சிற்றூந்தில் மோதுண்டு சிறிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த நபரின் 4 வயது மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இன்று காலையே இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளதுடன், சிற்றூந்தின் சில்லில் சிக்கி சிறுமி…
மேலும்