நிலையவள்

பாகிஸ்தான் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடை

Posted by - April 8, 2017
பாகிஸ்தான், 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்ட் ஷகீல் ஹுஸைன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று இந்த அரிசியைக் கையளித்துள்ளார். இலங்கையில்இ வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக இந்த அரிசியை நன்கொடையாக வழங்குவதாக…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியினர் , ஜனாதிபதி சந்திப்பு

Posted by - April 8, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்ததாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன ஆகியோருடன், தாமும் ஜனாதிபதியை சந்தித்ததாக விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும்…
மேலும்

முசலி மற்றும் மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும்- நசீர்

Posted by - April 8, 2017
முசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். சிறுபான்மை…
மேலும்

வடக்கு வனஜீவராசிகள் திணைக்கள 2017 வேலைத்திட்டத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு சாள்ஸ் எம் பி

Posted by - April 8, 2017
வட மாகாண வனஜீவராசிகள்  திணைக்களத்தின் கீழான  அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் , வன…
மேலும்

வவுனியா இராணுவத்தினரிடம் உள்ள காணி தொடர்பில் தவறான புள்ளிவிபரம் – வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 8, 2017
வவுனியா மாவட்டத்தில் வெறும் 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டதானது வேண்டுமென்றே திசை திருப்பல் தரவாகவே எண்ணத்தோன்றுவதாக வட மாகாண சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமான ப.சத்தியலிங்கம்…
மேலும்

2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

Posted by - April 8, 2017
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால் பரீட்சை திகதியினை மாற்றுவது தொடர்பில் ஆராயுமாறு திணைக்களத்திடம் கோரியுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது…
மேலும்

களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரொருவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பலபிடிய நீதிமன்றத்திற் அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர் களுத்துறை நீதவான்…
மேலும்

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டும்:டெய்ஜி டெல் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயாஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ். மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது…
மேலும்

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்கள் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கடந்த அரசாங்கத்தால் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்பட்டன – கபீர்

Posted by - April 8, 2017
கடந்த அரசாங்கம் தொழிலாளர்கள் உரிமையை மீறி அவர்களின் ஊழியர் சேமலாப நிதியை கூட பெற்றுக்கொடுக்க வில்லை என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். கண்டி -கெலெபொக்க தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும்