நிலையவள்

தென்கிழக்கு பல்கலைக்கழக 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - August 31, 2017
இலங்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம்…
மேலும்

தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

Posted by - August 31, 2017
அரலகங்வில பொலிஸ் பிரிவின் தம்மிந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை 05.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் வயது 22 எனவும் ஹோடியாதெனிய –…
மேலும்

கிளிநொச்சியில் கடலட்டை வளங்கும் நிகழ்வு

Posted by - August 31, 2017
31-08-2017 கிளிநொச்சி  பூநகரி பிரதேச செயலகத்தின் பள்ளிக்குடா கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டவளர்மதி கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க அங்கத்துவர் பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் அட்டைப்பண்ணைக்கான கடல் அட்டைகள்  சிறு கைத்தொழில் அமைச்சர்  தயா கமகே மற்றும் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால்…
மேலும்

இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!-ரணில்

Posted by - August 31, 2017
இந்த வருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.இலங்கையின் வருவாயை மூன்று…
மேலும்

நுவரெலியா குப்பை மேட்டு விவகாரம்; மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 31, 2017
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டு விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுவான குப்பை மேட்டில் அளவுக்கு அதிகமான குப்பைகளை நுவரெலியா பிரதேச சபை கொட்டி வருவதாகவும், இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு சுகாதார…
மேலும்

ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவம் : இருவருக்கு பிணை

Posted by - August 31, 2017
ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மூன்று பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிணையில் செல்ல கம்பஹா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரிகேடியர்…
மேலும்

08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்கு!

Posted by - August 31, 2017
பொகவந்தலாவ ஆல்டி தோட்டத்தில் 08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா் பொகவந்தலாவ ஆல்டி கிழ்பிரிவு தோட்டத்தில் இன்று கொழுந்து பறித்து கொண்டிருந்த 08பெண்  தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனா். குளவி கொட்டுக்கு…
மேலும்

நுவன் சல்காதுவை கைதுசெய்ய கோரிக்கை!

Posted by - August 31, 2017
பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைதுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார். பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
மேலும்

உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

Posted by - August 31, 2017
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மெரவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.  இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  இதன்போது உயிரிழந்தவர் 58 வயதுடையவர்…
மேலும்

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

Posted by - August 30, 2017
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.…
மேலும்