தென்கிழக்கு பல்கலைக்கழக 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

496 0

இலங்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.என்.நாஜீம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு தொழில்நுட்பப்பிரிவு மாணவர்களுக்கும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் இடையே இன்று முற்பகல் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment