தென்னவள்

பதில் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

Posted by - September 17, 2025
சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

எதிர்க்கட்சி உறுப்பினர்களை குற்றம்சாட்ட பொலிஸார் போதைப்பொருள் வைப்பதாக சாகர காரியவசம் குற்றச்சாட்டு

Posted by - September 17, 2025
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அத்துமீறிய வகையில் நுழையும் பொலிஸார் அங்கு போதைப்பொருட்களை இரகசியமான முறையில் வைத்து விட்டு பின்னர் கைது செய்கிறார்கள். பொலிஸாரின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

நேபாளம், இந்தோனேசியா, பங்களாதேஷ், இலங்கை மக்கள் எழுச்சிகள் எச்சரிக்கைளேயாகும்

Posted by - September 17, 2025
நேபாளம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் உருவான மக்கள் எழுச்சிகள் வழக்கத்துக்கு மாறானவை அல்ல. மாறாக அவை சமத்துவமின்மை மேலோங்குகையில் ஏற்படக்கூடிய விளைவினைக் காண்பிக்கும் எச்சரிக்கைகள் ஆகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பானவை !

Posted by - September 17, 2025
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறை குறித்த பூர்வாங்க வரவு செலவுத்திட்டக் கலந்துரையாடல்

Posted by - September 16, 2025
கடல்சார் பொருட்கள் போக்குவரத்து  விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. கடல்சார்  பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள…
மேலும்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூடுவது தொடர்பான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

Posted by - September 16, 2025
புதிய சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஒலுவில் துறைமுகம் தொடர்பான எதிர்காலத் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும்

யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்

Posted by - September 16, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா…
மேலும்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை

Posted by - September 16, 2025
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டது.
மேலும்

யானை தந்தங்களை தம்வசம் வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Posted by - September 16, 2025
அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை  எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

Posted by - September 16, 2025
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்