யானை தந்தங்களை தம்வசம் வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

75 0

அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை  எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அநுராதபுரத்தில் ஹல்மில்லேவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார்.

கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.