சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

286 0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2-ந் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. அதில் 5 வயதிற்கு உட்பட்ட 7,55,938 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்காக, சென்னை மாநகரில் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,624 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.