வடக்கில் காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை சந்தித்ததாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்போது, நல்லிணக்கச் செயற்பாட்டில் தமது வகிபாகம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.