வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியை மறித்து போராட்டத்தில்….(காணொளி)

362 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், குறித்த போராட்டங்களுக்கு ஆதரவாக வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் ஏ-9 வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், 56 சமூக அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கிய நிலையில், இன்றையதினம் வழமைபோல் மக்கள் நடமாடுவதாகவும், பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.