மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்- எஸ்.வியாழேந்திரன்(காணொளி)

274 0

மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்குடா பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பின்னணி தொடர்பில் பொலிஸார் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.